நசியனூரில் 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
HIGHLIGHTS

நசியனூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா, பேரூர் கழக திமுக செயலாளர் மோகன சுந்தரி, 5வது வார்டு கவுன்சிலர் நந்தினி, 6வது வார்டு கவுன்சிலர் பிரபா, மற்றும் வார்டு செயலாளர்கள் சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மேட்டுவபாளையம், சிஎஸ்ஐ வீதி, பெரிய மாரியம்மன் கோவில், சித்தர் குட்டை, தொட்டிபாளையம் உள்பட ஒன்பது இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.