அந்தியூரில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
இன்று தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக தலைவர் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அதிமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே அந்தியூர் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் டி எஸ் மீனாட்சிசுந்தரம் தலைமையில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் கே.எஸ்.மோகன்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ் பி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தேவராஜ், நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஜி சண்முகானந்தம், அந்தியூர் அவைத்தலைவர் சின்னத்தம்பி நாயுடு,நகர பேரவை செயலாளர் பாலுசாமி, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா சம்பத்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஈஸ்வரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பார்மோகன், இலக்கிய அணி செயலாளர் டாக்டர் அசோகன், ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு ஜான்சன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.