/* */

பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது

அந்தியூர் அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாதுரை (வயது 25). கூலித் தொழிலாளி. மகாதுரை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த உறவினர் வீட்டில் ஈரோடு பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவி வந்துள்ளார். அந்த மாணவி உறவினர் வீட்டுக்கு வந்ததால், மகாதுரை அந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார். இதைப்பயன்படுத்தி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் இது குறித்து மாணவிகளிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். இதில் மாணவி நடந்தவற்றை கூறி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகாதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?