/* */

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் பர்கூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட ராசு.

அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள ஈரொட்டி தேக்கங்காடு மலைக்கிராமத்தில் ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக நக்சல் சிறப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் தேவராஜ் தலைமையில் நக்சல் சிறப்பு தனிப்பிரிவு குழுவினர் மலைக்கிராமத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (27-ம் தேதி) சென்றனர்.

பின்னர் அந்த கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த பொன்னப்பன் மகன் ராசு (45) என்பதும், அவ்வப்போது, வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியை வைத்திருந்ததும் தெரியவந்து. இதைத்தொடர்ந்து, ராசுவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 Jun 2023 4:45 AM GMT

Related News