/* */

குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
X

தெய்வசிகாமணி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பூமணிசாமி கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 55). இவர் குருவரெட்டியூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பால் பரிசோதகராக வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில், இவர் நேற்று காலை கரடிபட்டியூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 25 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?