/* */

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது‌

அந்தியூர் அடுத்த வேம்பத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட சங்கர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட சிந்தகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சித்தோடு ஆவின் பால் பண்ணை ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பழனிச்சாமி அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் பழனிச்சாமி வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 34). கூலி தொழிலாளி என்பதும், பழனிச்சாமி வீடு புகுந்து பிரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் சங்கரை கைது செய்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  8. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  9. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)