/* */

அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அந்தியூர் தேர் வீதியில் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார்.

தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான பேட்டை பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்து சாமியை வழிபட்டு வருகின்றனர்.

Updated On: 19 Aug 2022 5:15 AM GMT

Related News