/* */

அரச்சலூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஜே.சி.பி.டிரைவர் பலி

திருமண நாளான்று சோகம் அரச்சலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஜே.சி.பி டிரைவர் பலியானார்.

HIGHLIGHTS

அரச்சலூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஜே.சி.பி.டிரைவர் பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனி குமரன்நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விக்ரமன் ஜே.சி.பி (வயது 40). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்கிரமனுக்கு நேற்று திருமண நாள். இதனால் மனைவி, குழந்தைகளுடன் திருமண கொண்டாட நாளை வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அரச்சலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வீட்டிற்கு முன் பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விக்ரமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்ரமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?