/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,778 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18,000 கன அடியில் இருந்து 22,778 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,778 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதாலும் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 22,778 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.74 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும். மேலும், அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Updated On: 14 July 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?