/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே 32 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று 2 பேர் வீடு திரும்பினர். இதனால் தற்போது 42 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 26 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்