Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்
ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கி உள்ளார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது இளைய மகன் சந்தோஷ்குமார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் கடந்த 5 ஆண்டுகளாக கே.டி.எம். பைக் வாங்குவதற்காக 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதனையடுத்து, ரூ.3.56 லட்சம் நாணயத்தை சேமித்து வைத்திருந்த சந்தோஷ்குமார் ஈரோட்டில் உள்ள கே.டி.எம். ஷேருமில் இன்று ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிச் சென்றார்.