/* */

தகாத வார்த்தை பேசிய நெடுஞ்சாலைதுறை பொறியாளர் கைது

பவானியில் கோர்ட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசிய நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தகாத வார்த்தை பேசிய நெடுஞ்சாலைதுறை  பொறியாளர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்திரா.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையம், எஸ். பி. நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சந்திரா(வயது 55). இவர், நெடுஞ்சாலைத்துறையில் உதவிப் பொறியாளராக கடலூரில் பணியாற்றி வருகிறார். இவரது தாத்தா கிருஷ்ணன், சித்தப்பா குழந்தைவேலுக்கு மூன்றரை ஏக்கர் நிலத்தை கடந்த 1999 ஆண்டு உயில் எழுதி வைத்துவிட்டார்.

இதுதொடர்பாக, பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் 2013-ம் வருடம் சந்திரா, அவரது தந்தை பாட்டப்பன் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததில் சித்தப்பா குழந்தைவேலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த சந்திரா, தனது தந்தை பாட்டப்பனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, பலமுறை நீதிமன்றத்திற்கு வந்த இவர், நீதிமன்ற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையில் பேசுவதும், நீதிமன்ற ஊழியர்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதும், மிரட்டுவதாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து, பவானி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் எஸ். சாந்தி, பவானி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திராவைக் கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Updated On: 25 March 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்