ஈரோடு மாவட்டத்தில் கனமழை: நேற்று ஒரே நாளில் 640.10 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 640.10 மீ.மி மழைப் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 640.10 மீ.மி மழைப் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று பவானி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.14) நேற்று காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 17.00 மி.மீ ,
கோபி - 26.20 மி.மீ ,
பவானி - 111.60 மி.மீ ,
பெருந்துறை - 96.00 மி.மீ ,
நம்பியூர் - 2.00 மி.மீ ,
சத்தியமங்கலம் - 59.00 மி.மீ ,
தாளவாடி - 2.00 மி.மீ ,
கொடிவேரி - 56.00 மி.மீ ,
மொடக்குறிச்சி - 19.00 மி.மீ ,
கவுந்தப்பாடி - 55.60 மி.மீ ,
சென்னிமலை - 7.00 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 23.00 மி.மீ ,
அம்மாபேட்டை - 25.20 மி.மீ ,
பவானிசாகர் - 29.20 மி.மீ ,
கொடிவேரி அணை - 40.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 20.00 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 51.30 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 640.10 மி.மீ ஆகவும், சராசரியாக 37.65 சதவீதமாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.