/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்களுக்கு மேலானவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியினை 89.86 சதவீதம் பேர், அதாவது 16 லட்சத்து 25 ஆயிரத்து 595 பேரும், 2-வது தவணையினை 68.78 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 44 ஆயிரத்து 236 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 69 ஆயிரத்து 831 டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 15 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்