/* */

கோபி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்கள் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்கள் பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட மாரிமுத்து.

கர்நாடக மாநிலம் ஊகியம் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க பங்களாப்புதூர் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி பங்களாப்புதூர் போலீசார் கே.என்.பாளையம் கடம்பூர் ரோடு வனச்சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஊகியத்தில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி அதில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அதில் 135 பாக்கெட்டுகளில் ரூ.16,392 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை குட்காவுடன் பறிமுதல் செய்து கோபி நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 5 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?