/* */

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

Grama Sabha Meeting - ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 225 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
X

பைல் படம்.

Grama Sabha Meeting - ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தின்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு, தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்வது முக்கிய கடமை ஆகும். மேலும் கிராமசபை கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்று, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களிலும், இன்று முதல் (சனிக்கிழமை) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசியக்கொடி பறக்கவிட வேண்டும். நாளை மறுநாள் ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். வேறு எவரேனும் தேசியக்கொடி ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தாலோ, தேசியக்கொடியை அவமதித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார்களை 0424 2260087 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Aug 2022 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  5. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  6. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  8. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  9. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...