/* */

கீழ்பவானி வாய்க்கால் கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.

கீழ்பவானி வாய்க்கால் கரையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடலை மீட்டு சிறுவலூர் போலீசார் விசாரணை

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்கால் கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன்கோயில் வாய்க்கால்மேடு பகுதி கீழ்பவானி வாய்க்கால் கரையில் இளம் பெண் உயிரிழந்து கிடப்பதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற சிறுவலூர் போலீசார் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் உயிரிழந்துள்ள இளம் பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த பெண் இல்லை என்பதும் நாடோடிகள் குழுவில் உள்ள பெண் போல் தெரிவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள இளம் பெண்ணிற்கு சுமார் 30 வயது இருக்கலாம் என்றும் திருணமானவர் என்றும் சிறுவலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளம் பெண் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 April 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!