/* */

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

HIGHLIGHTS

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு
X

குண்டேரிப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொங்கர்பாளையம் கிராமத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த தடுப்பணையின் நீர் பிடிப்புப் பகுதிகளாக, குன்றி, விளாங்கோம்பை, மல்லியம் துருவம், கம்பனூர் உள்ளிட்ட வனப்பகுதிகள் விளங்குகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையில் 42 அடிவரை நீரினைத் தேக்கி வைக்கலாம். அணையில் இருந்து 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.



இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.கடந்த சில நாட்களாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு காரணமாக, அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.தற்போது அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால் பொதுப்பணித்துறையினர் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 30 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்