/* */

கோபி: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே நாட்டுவெடியை வீசி கொன்று விடுவோம் என போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம், வாணிப்புத்தூர்,காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது டி.ஜி.புதூர்-கெம்மநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும்நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது இருவரும் அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று காவல்துறையினரை பார்த்து மிரட்டினர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தபோது, இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை விரட்டவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும் அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நான்கு அவுட்காய்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?