/* */

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து 104 அடியை எட்டியது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கொடிவேரி அணை பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை பகுதி நேற்று மூடப்பட்டது. மேலும் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கவும், மீன்பிடித்தல், துணி துவைத்தல் போன்றவற்றுக்காக ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கொடிவேரி அணை பகுதியில், வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலமாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கொடிவேரி அணைக்கட்டு முகப்பு வாயிலில், தடுப்புகள் வைத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்