/* */

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 40 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், இரவு பெய்த கனமழையால், 40 ஏக்கரில் பயிரடப்பட்டிருந்த கரும்பு பயிர் முற்றிலும் சேதமடைந்தது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 40 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்
X

கனமழையால் சேதமடைந்த கரும்பு பயிர்கள்

ஈரோடு கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், கரட்டூர். தாசம்பாளையம், ஒத்தகுதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழையின் காரணமாக கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த, சுமார் 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஒரு வருட கால பயிரான கரும்பு, ஓரிரு வார காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. நேற்று இரவு பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழைக்கு பல லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. அரசு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Updated On: 19 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை