/* */

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு
X

கவுந்தப்பாடி காந்தி கோவிலில் நடைபெற்ற, சிறப்பு வழிபாடு.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் கவுந்தப்பாடி அருகே, சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தாம்பாளையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு, ஊர் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.வையாபுரி மற்றும் உறுப்பினர்கள் சார்பில், காந்திக்கு கோவில் கட்டப்பட்டது.

இங்கு காந்தி மற்றும் கஸ்தூரிபா காந்திக்கு, தனித்தனி சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 3 கால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று, ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு தேன், பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், தயிர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகாத்மா காந்திக்கும், கஸ்தூரிபா காந்திக்கும் அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக பொதுமக்கள் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வந்தார்கள். அதைக்கொண்டு மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி சிலைக்கு அபிேஷகம் நடத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

Updated On: 3 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி