Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையத்தில் கட்டுமான பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு
கோபிசெட்டிபாளையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் கிராமம் பெரியார் நகரில் ரூபாய் 37 கோடியை 22 லட்சம் மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 75 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அரசு மீதமுள்ள நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.