/* */

கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி

கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 43). நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் தங்களிடம் லக்கம்பட்டியில் ஒரு ஏக்கர் 17 சென்ட் நிலம் உள்ளதாகவும், நல்லகவுண்டம்பாளையத்தில் ஒரு நிறுவனம் உள்ளதாகவும், அதை விற்பனை செய்ய உள்ளோம் என்றும் கூறி உள்ளார்கள்.

இந்த சொத்துகளை ரூ.10 கோடிக்கு வாங்கி கொள்ள மகேஸ்வரன் ஒப்புக்கொண்டார்.அதன்பிறகு ரூ.1 கோடியை மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தினார். அப்போது அவர்கள் 2 பேரும் சொத்தின் மீது உள்ள வங்கி கடன் செலுத்திவிட்டு தடையின்மை சான்று பெற்று தருவதாகவும், அதன் பிறகு மீதமுள்ள தொகையை தருமாறும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வங்கியில் இருந்து தடையின்மை சான்று பெற்று தராமல் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்தநிலையில் அந்த நிறுவனம் வங்கியின் ஏலத்துக்கு சென்றுவிட்டதாகவும், வேறு ஒருவர் அந்த நிறுவனத்தை வாங்கிவிட்டதாகவும் மகேஸ்வரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரன் அவர்களிடம் சென்று தான் முன்பணமாக கொடுத்த ரூ.1 கோடியை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரனிடம் ரூ.1 கோடியை மோசடி செய்த 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்

Updated On: 4 Nov 2021 3:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!