/* */

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.

HIGHLIGHTS

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X

மழையில் நனைந்த நெல் மூட்டைகள். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி மற்றும் அரக்கண்கோட்டை பாசன பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யவதற்காக அரசு சார்பில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள், பெரும்பாலும் திறந்த வெளியில் அமைந்துள்ளதாலும், இடப்பற்றாக்குறை காரணமாகவும், விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. இதன் காரணமாக விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்துவதற்கான இடம் இல்லாததால் நனைந்த நெல் மூட்டைகளை டிராக்டர் மூலம் வேறு இடங்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அதிக இடவசதியுடனும் கொள்முதல் நிலையங்களில் மேற்க்கூரை அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி