/* */

கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

கொடிவேரி தடுப்பணையிலிருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து இடதுபுறம் அரக்கன்கோட்டை வாய்க்காலும், வலதுபுறம் தடப்பள்ளி வாய்க்காலும் செல்கிறது. இந்த வாய்க்கால்கள் மூலம் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளார்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம்போக பாசனத்துக்காக தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும்.

இந்தநிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 2-ம்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 100 அடி கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கொடிவேரியில் நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Updated On: 15 Oct 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி