/* */

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கூகலூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள புதுப்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சரண்விக்னேஷ். இவரும் புதுக்கரைப்புதூரை சேர்ந்த நண்பர் வசந்தகுமார் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கூகலூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சரண்விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வசந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated On: 6 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  3. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  4. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  7. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  8. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  9. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  10. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...