/* */

கோபி அருகே ட்ரோன் கேமரா மூலம் 855 சாராய ஊறல் கண்டுபிடிப்பு!

கோபி அருகே ட்ரோன் கேமரா மூலம், மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில், 855 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தசையன்காடு, எம்மாம்பூண்டி, சோளக்காடு, மீன்குட்டை, எம்.ஜி.ஆர் நகர், ராயர்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து, முட்புதர்களுக்கு அடியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்கள், சுமார் 855 லிட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாராய ஊறல்களை கைப்பற்றிய போலீசார் அதனை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சியதில் தொடர்புடையர்கள் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, வரும் காலங்களில் ராயர்பாளையத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் அங்கேயே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து அப்பகுதிகள் கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 12 Jun 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?