/* */

கொடிவேரி அணை 2வது நாளாக மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பவானிசாகர் அணையில் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றம் காரணமாக கொடிவேரி அணை 2வது நாளாக மூடப்பட்டது.

HIGHLIGHTS

கொடிவேரி அணை 2வது நாளாக மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும், பலத்த மழையால், அணைக்கு வரும்நீர் உபரிநீராக நேற்று முன்தினம் முதல், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8:00 மணிக்கு, பவானி ஆற்றில், வினாடிக்கு, 7,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தடுப்பணையில் இருந்து, மெகா அருவியாக பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர், மேடான அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறையினர் அறிவிப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, பெரியகொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி, அடசப்பாளையம் பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் கொடிவேரி அணை நேற்று மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2வது நாளான இன்று கொடிவேரி அணை மூடப்பட்டது.இன்று விடுமுறை காரணமாக அணைக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

Updated On: 14 Oct 2021 4:32 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்