/* */

கோபிசெட்டிப்பாளையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிப்பாளையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
X

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய் பரவும் வாய்ப்பு உள்ளன. இதை தடுக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு ஆய்வு பணியில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுப்படி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், கார்த்திக், களப்பணி உதவியாளர் காளிமுத்து ஆகியோர் கோபி-ஈரோடு ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது சரவணா தியேட்டர் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்த டயர்களில் அதிகமாக கொசுப் புழு இருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோபி பகுதியில் கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் அந்த வளாகத்தில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தாலோ, கொசுக்கள் இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Updated On: 18 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  2. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  6. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  7. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  8. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  9. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  10. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!