/* */

கோபிசெட்டிபாளையம் அருகே தோப்பில் பாக்குகளை திருடிய 5 பேர் கைது

டி.என்.பாளையம் அருகே தோப்பில் பாக்கு காய்கள் திருடி கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே தோப்பில் பாக்குகளை திருடிய 5 பேர் கைது
X

பாக்கு காய்களை திருடியதாக கைது செய்யப்பட்ட 5 பேர்.

ஈரோடு மாவட்டம், டி.என். பாளையம் அருகே உள்ள மோதூர் பனங்காட்டு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருக்கு அந்த பகுதியில் பாக்கு தோட்டம் உள்ளது.

இந்த பாக்கு தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது மூர்த்தி அங்கு வந்து பார்த்த போது அங்கு 4 பேர் பாக்கு காய்களை பறித்து மூட் டைகளில் போட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் 8 மூட்டைகளில் பாக்குகளை நிரப்பி வைத்திருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி சத்தம் போட்டு கொண்டு அவர்களை பிடிக்க முயன்றார்.அவர்கள் அந்த பாக்கு மூட்டைகளை கொள்ளை அடித்து கொண்டு சரக்கு வேனில் தப்பி ஓடி விட்டனர்.

இதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் மூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் அந்தியூர் மாத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசன் ( வயது 48), கார்த்தி (வயது 28), முருகன் (வயது 48), அந்தியூர் சந்திபாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) மற்றும் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 28) ஆகியோர் பாக்கு காய்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 22 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...