/* */

கோபிச்செட்டிபாளையத்தில் போலி டாக்டர் கைது

கோபிச்செட்டிபாளையத்தில் அலோபதி மருத்துவம் பார்த்து, மருந்து மாத்திரைகளை வழங்கி வந்த புகாரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிபாளையத்தில் போலி டாக்டர் கைது
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கரட்டுப்பாளையம் ரோடு காசிபாளையத்தில் நாகராஜ் என்பவர், தனது வீட்டில் அலோபதி மருத்துவம் பார்த்து, பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாக புகார் வந்தது.

அதன்பேரில், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யசோதா பிரியா, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன், கடத்தூர் போலீசார் நாகராஜ் (58) வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை, அவர் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், நாகராஜ் மருத்துவப்படிப்பு படிக்காமலும், மருத்துவச்சான்று ஏதுவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தூர் போலீசார் நாகராஜ் மீது மோசடி மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி வழக்கு பதிந்து கைது செய்தனர். கைதான நாகராஜிடம் இருந்து 180 காய்ச்சல் மாத்திரைகள், ஊசி, மருந்துகள், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை கைப்பற்றினர்.

நாகராஜ்க்கு மருந்துகள் வழங்கிய முகவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 27 May 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  2. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  3. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  5. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  6. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  7. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  8. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  9. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு