/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு
X

ஈரோட்டில், வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஜூலை 5-ந் தேதி வரை தேதி வரை, தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், 36 -வது நாளான நேற்றும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 458 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 188 இருசக்கரவாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக அந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. எனினும், ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

Updated On: 30 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி