Begin typing your search above and press return to search.
கவுந்தப்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது, கவுந்தப்பாடியில், 118 இடங்களில் சிலைகள் வைக்கவும், செப்டம்பர் 4ஆம் தேதி முக்கிய வீதிகள் வழியாக, பெருந்தலையூர் அருகே பவானி ஆற்றில், சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், மாநில செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.