ஈரோடு மக்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறது "ஃபன் ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி
ஈரோடு மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி 2வது முறையாக மீண்டும் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி 2வது முறையாக மீண்டும் நடைபெற உள்ளது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் சென்னை, கோவை பெரு மாநகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோட்டில் ஜேசிஐ ஈரோடு மற்றும் மாவட்ட போலீசார் சார்பில் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரியார் நகரில் உள்ள 80 அடி சாலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல் என களைகட்டிய நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியானது, ஈரோடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 2வது முறையாக வரும் செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பாடல், நடனம் உள்ளிட்டவற்றுடன் உற்சாகம் கரைபுரளும் இந்த நிகழ்ச்சியில், சைக்கிள் மற்றும் மோட்டார் வாகன நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. ஒரு மாதங்களுக்கு பிறகு ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற இருப்பது ஈரோடு மக்களிடையே மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.