/* */

ஈரோடு: இலவச தொழிற்பயிற்சி கனரா வங்கி அழைப்பு

ஈரோட்டில் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், இலவசமாக வழங்கப்படும் பயிற்சியில் சேர அழைப்பு.

HIGHLIGHTS

ஈரோடு: இலவச தொழிற்பயிற்சி கனரா வங்கி அழைப்பு
X

கனரா வங்கி சார்பில் வெளியிட்ட அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் போது இலவசமாக அனைத்து விதமான மசாலா பவுடர் தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியானது (14.02.2022 முதல் 25.02.2022 வரை) மொத்தம் 10 நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ்களும், சுய தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனையும் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் "கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002" என்ற முகவரியில் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 4 Feb 2022 2:15 PM GMT

Related News