/* */

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

அந்தியூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
X

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமினை பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமை அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதுடன், இயன்முறை சிகிச்சை வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுத் தருதல் உள்ளிட்ட சலுகைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்தியூர் வட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

இதில் சிறப்பு மருத்துவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் முருகன் மாதேஸா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஜெயஸ்ரீ மேற்பார்வையாளர் லிங்கப்பன் தவிட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலு சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு