/* */

பவானியில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி: அதிகாரிகள் அதிரடி சோதனை

பவானி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பவானியில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி: அதிகாரிகள் அதிரடி சோதனை
X
பவானியில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, எண்ணெய், நிறமூட்டும் பொடிகள் மற்றும் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சதீஸ்குமார், லட்சுமி ஆகியோர் சோதனை நடத்தினர்.

பவானி புதிய பேருந்து நிலையம், மேட்டூர் சாலை, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் 6 அசைவ உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கெட்டுப்போன கோழி இறைச்சி 5 கிலோ, செயற்கையாக நிறமூட்டம் பொடி, கெட்டுப்போன எண்ணெய், தர்பூசணி விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய உணவகங்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Updated On: 7 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை