கோபி அருகே ஓமியோபதி படித்து விட்டு, ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த தந்தை, மகன் கைது
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஓமியோபதி படித்து விட்டு, ஆங்கில மருத்துவம் சிகிச்சையளித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- கோபி அருகே ஓமியோபதி படித்து விட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் சிகிச்சை அளித்த தந்தை மற்றும் மகன் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டனர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் ஏரம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 47). இவர், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வெங்கடேஸ்வரன் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகாவிடம், வெங்கடேஸ்வரனின் மருத்துவ முறை குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் அம்பிகா மற்றும் அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை ( நேற்று) ஏரம்பாளையத்தில் உள்ள வெங்கடேஸ்வரன் (வயது 47) வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வெங்கடேஸ்வரன் ஓமியோபதி மட்டும் படித்து விட்டு, மகன் ஜோதி பிரசாத் உடன் சேர்ந்து, (வயது 25) அப்பகுதி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஸ்வரன் மற்றும் ஜோதி பிரசாத் (25) ஆகியோரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த ஆங்கில மருந்துகள், ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனால், வெங்கடேஸ்வரனிடம் மருத்துவம் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.