/* */

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகையாக 4000 ரூபாய் மற்றும் 15 பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் 743 பேருக்கு, நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நிவாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அர்ச்சகர்கள்,பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை 4000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்