/* */

ஈரோடு: தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
X

புளிஞ்சூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பள்ளிவாசல் உலமா நிகழ்ச்சிக்கு ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கி வந்த தனியார் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக பகுதியில் உள்ள புளிஞ்சூர் அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார் விசாரணை வருகின்றனர்.

Updated On: 20 Sep 2022 1:15 PM GMT

Related News