'மூச்சு திணறுது' மல்லிகைப்பூ விலை; சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.6,195-க்கு விற்பனை
erode news, erode news today- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.6,195-க்கு விற்பனையானது.
HIGHLIGHTS
erode news, erode news today- பொங்கல் பண்டிகை நாளை முழுவதும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது இதனால் பூக்களின் சேவை அதிகமாக இருப்பதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இன்று (14.01.2023) நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு;
மல்லிகைப்பூ - ரூ.6,195 ,
முல்லைப்பூ - ரூ.3,480 ,
காக்கா - ரூ.2,475 ,
செண்டு மல்லி - ரூ.81 ,
கோழிக்கொண்டை - ரூ.110 ,
ஜாதி முல்லை - ரூ.1,750 ,
கனகாம்பரம் - ரூ.1,200 ,
சம்பங்கி - ரூ.180 ,
அரளி - ரூ.420 ,
துளசி - ரூ.50 ,
செவ்வந்தி - ரூ.120.
இதுகுறித்து மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, தற்போது சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரம் தைப்பொங்கல் காரணமாக தேவை அதிகரித்து உள்ளது. அதனால் விலை உயர்ந்துவிட்டது, என்றனர்.