அந்தியூரில் குறைந்தபட்சமாக 15.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி குறைந்தபட்சமாக அந்தியூரில் 15.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், கடும் பனிபொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரை நீடிக்கிறது. தாளவாடி, பர்கூர், ஆசனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் தொடங்கி காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால், வாகனங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் அனைத்தும் காலை நீண்ட நேரமாகியும், வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றது. மேலும், வயல் வெளிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனித்துளிகள் படிந்து இருந்தது. இந்த பனிப்பொழிவின் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, அம்மாபேட்டையில் 19.1 டிகிரி செல்சியஸ், அந்தியூரில் 15.1 டிகிரி செல்சியஸ், பவானியில் - 17 டிகிரி செல்சியஸ், பவானிசாகரில் 19 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 19.8 டிகிரி செல்சியஸ், கோபிசெட்டிபாளையம் - 17.3 டிகிரி செல்சியஸ், கொடுமுடியில் 19.1 டிகிரி செல்சியஸ், நம்பியூரில் 16.7 டிகிரி செல்சியஸ், பெருந்துறையில் 17.6 டிகிரி செல்சியஸ், சத்தியமங்கலத்தில் 16 டிகிரி செல்சியஸ், டி.என்.பாளையத்தில் 16.1 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.