/* */

குடும்ப தகராறில் கணவன் - மனைவி தற்கொலை

Erode newsசென்னிமலை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து மனைவியும், துாக்கு போட்டு கணவனும் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

குடும்ப தகராறில் கணவன் - மனைவி தற்கொலை
X

பைல் படம்.

Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முத்தையன் கோவில், சென்னிமலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 31). டெய்லர். திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகள் ஜானகி (23). ஜெயக்குமாரும், ஜானகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் நித்திஷ் (5), ராகவ் (4) உள்ளனர்.

ஜெயக்குமார் தனியார் வங்கியில், மாத தவணைக்கு ரூ.16 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. கடன் வாங்கி, வீடு கட்டிய நிலையில், சரியாக வருமானம் ஈட்டாமல், குடிப்பதை அவர் வழக்கமாக்கி கொண்டதால், ஜானகி, ஜெயக்குமாரை கண்டித்துள்ளார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீடு கட்ட வாங்கிய கடனை செலுத்துவது குறித்து, கடந்த 10-ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜானகி மனவேதனை தாங்க முடியாமல், விஷம் குடித்து விட்டார். இதனால் வாந்தி எடுத்து, வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜானகி இறந்தார்.

இதுகுறித்து, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே மனைவி இறந்த துக்கத்தில் ஜெயக்குமார் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். ஜானகியை விரும்பி, காதலித்து திருமணம் செய்த நிலையில், இரண்டு பிள்ளைகள் உள்ள போது, கணவர், பிள்ளைகளை தனியாக தவிக்கவிட்டு, ஜானகி தற்கொலை செய்துகொண்டது, ஜெயக்குமாரை அதிகளவில் பாதித்தது. இதுகுறித்து, உறவினர்களிடம் வேதனையாக அவர் பலமுறை கூறியுள்ளார். குடிப்பழக்கத்தால், தன்னுயை குடும்பம் இந்த அவல நிலைக்கு வந்துவிட்டதாக, உறவினர்களிடம் புலம்பி அழுதுள்ளார்.

நேற்று மாலை ஜெயக்குமாரின் வீட்டுக்கு, அவருடைய உறவினர்கள் ஜானகியின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க வந்திருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் சென்ற ஜெயக்குமார், வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஜெயக்குமார் சடலம் தொங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்தும், சென்னிமலை போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Updated On: 13 Nov 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்