/* */

ஈரோடு: ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட‌ பணி; கலெக்டர் ஆய்வு

Erode news, Erode news today- ஈரோடு ஜி.ஹெச்.ரவுண்டானா சாலையில், ஊராட்சிகோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழாய்கள் இணைப்பது தொடர்பாக அலுவலர்களுடன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு: ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட‌ பணி; கலெக்டர் ஆய்வு
X

Erode news, Erode news  today-ஈரோடு மாநகராட்சி, ஜி.ஹெச்.ரவுண்டானா சாலையில், ஊராட்சிகோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழாய்கள் இணைப்பது தொடர்பாக அலுவலர்களுடன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில், குடிநீர் ஆதாரமாக உள்ள ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக பழைய மற்றும் புதியதாக பகிர்மான குழாய்களை இணைப்பது தொடர்பாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சிக்கு தனிக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.484.45 கோடிக்கு அரசாணை எண் 109, நாள் 20.08.2016ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இடைக்கால (2022) மக்கள் தொகையின் படி 7 லட்சம் மக்களுக்கு 114.75 மில்லியன் லிட்டர் குடிநீர் மற்றும் உச்சகட்ட (2047) மக்கள் தொகையின்படி 9.05 லட்சம் மக்களுக்காக 147.69 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவகைக்கப்பட்டுள்ளது.

பவானி நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டை அருகில் உள்ள வரதநல்லூரில் காவிரி ஆற்றில் நீர் சேகரிக்கப்பட்டு கிணறு அமைத்து, அதிலிருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியிலிருந்து, 22.80 கி.மீ குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.உ.சி.பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 42 லட்சம் மற்றும் 118 லட்சம் கொள்ளளவு தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இவ்விரு தரைமட்ட தொட்டிகளிலிருந்து 79.683 கி.மீ. கிளை நீருந்து குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 மேல்நிலைத் தொட்டிகளுக்கும், நிலையிலுள்ளி 46 பழைய மேல்நிலைத் தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் 731.82 கி.மீ. நீளமுள்ள பகிர்மான குழாய்களிலிருந்து 1,05,500 குடிநீர் வீட்டினைப்புகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.

தற்போது இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியைச் சார்ந்த மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் பிரதான சாலைகளான ஸ்வஸ்திக் சர்க்கிள், ஜி.எச்.ரவுண்டானா, பிரப்ரோடு, கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் ரோடு போன்ற முக்கிய சாலை பகுதிகளில் குறுக்கே மற்றும் நெடுகிலும் பழைய மற்றும் புதியதாக பதியப்பட்ட பகிர்மான குழாய்களை இணைக்கும் பணி நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துக் காவல்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறை அலுவலர்களுடன் ஸ்வஸ்திக் சர்க்கிள், ஜி.எச்.ரவுண்டானா ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.

மேலும், பணிகளை துவங்குவதற்கு முன் சாலைகளின் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றை முறையாக அளவிடப்பட்டு, அட்டவணை தயாரித்து, சம்மந்தப்பட்ட துறையின் மூலம் தடையின்மை சான்று பெற்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சிவக்குமார், கோட்டப் பொறியாளர் (மின்சார வாரியம்) எஸ்.ராமச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் (நெடுஞ்சாலைத்துறை) சரவணன், உதவி நிர்வாகப் பொறியாளர் ரேவதி, உதவி பொறியாளர்கள் பிரியதர்ஷினி, விவேகானந்தன், (எல்&டி) நிறுவன மேலாளர் குமரேசன் உட்பட துறை சார்ந்து அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 11 Dec 2022 4:15 AM GMT

Related News