மார்ச் 19ல் ஈரோட்டில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மார்ச் 19-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மார்ச் 19-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 19-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, தொழில்கல்வி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் முகாமில் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், முகாமில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கான பதிவு மேற்கொள்ளப்படுகிறது. தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது.
தனியார் துறையில் பணிபுரிய விரும்புவோர் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0424-2275860, 9499055942, 9499055943 என்ற எண்களிலும், erodemegajobfair@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம், என ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.