/* */

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணைநிலை ராணுவத்தினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக சென்று தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையிலும், பாதுகாப்பாக நடத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் சுமூகமான முறையில் நடக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் வாக்களிக்கும் வசதியாக 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்திற்கு 92 துணை இராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் தேர்தல் நாளன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் பணியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் இந்த துணைநிலை ராணுவத்தினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக சென்று தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையிலும் பாதுகாப்பாக நடத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று பிபி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீ ஆகியோர் தலைமை தாங்கி கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் ரவிக்குமார் ஜெயமுருகன் பாலமுருகன் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர். கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு பெரிய அக்ரகாரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் வரை சென்று பின்னர் மீண்டும் பவானிரோடு வழியாக அசோகபுரம், பார்க் ரோடு, திருநகர் காலனியில் முடிவடைந்தது.

Updated On: 14 March 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  2. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  3. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  5. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  6. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  7. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  8. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  9. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு