/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 689 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 1,023 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 689 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 355 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 813 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் புதிதாக இன்று 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 573 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 1,023 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 8 ஆயிரத்து 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 725 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 3 Feb 2022 5:15 PM GMT

Related News