Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று 4 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,229 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று மட்டும் புதிதாக 1,302 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 680 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 7 ஆயிரத்து 734 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 722 பேர் பலியாகி உள்ளனர்.