ஈரோடு மாவட்டத்தில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை (நேற்று) மதியம் முதல் இரவு வரை பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிச்சியான காலநிலை நிலவியது.
இதனிடையே, மாவட்டத்தில் நேற்று (அக்.9) திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று (அக்.10) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 9.00 மி.மீ ,
கோபி - 25.20 மி.மீ ,
பவானி - 21.40 மி.மீ ,
பெருந்துறை - 27.00 மி.மீ ,
நம்பியூர் - 3.00 மி.மீ ,
சத்தி - 27.00 மி.மீ ,
தாளவாடி - 33.00 மி.மீ ,
கொடுமுடி - 30.80 மி.மீ ,
கவுந்தப்பாடி - 9.20 மி.மீ ,
சென்னிமலை - 5.00 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 6.20 மி.மீ ,
பவானிசாகர் - 16.00 மி.மீ ,
கொடிவேரி அணை - 6.20 மி.மீ
வரட்டுப்பள்ளம் அணை - 8.80 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 227.80 மி.மீ ஆகவும், சராசரியாக 13.40 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.