/* */

ஈரோடு மாவட்டத்தில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவு
X
நேற்று பெய்த மழையின் காரணமாக, சித்தோடு - கவுந்தப்பாடி சாலையில் உள்ள பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 227.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை (நேற்று) மதியம் முதல் இரவு வரை பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிச்சியான காலநிலை நிலவியது.

இதனிடையே, மாவட்டத்தில் நேற்று (அக்.9) திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று (அக்.10) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 9.00 மி.மீ ,

கோபி - 25.20 மி.மீ ,

பவானி - 21.40 மி.மீ ,

பெருந்துறை - 27.00 மி.மீ ,

நம்பியூர் - 3.00 மி.மீ ,

சத்தி - 27.00 மி.மீ ,

தாளவாடி - 33.00 மி.மீ ,

கொடுமுடி - 30.80 மி.மீ ,

கவுந்தப்பாடி - 9.20 மி‌.மீ ,

சென்னிமலை - 5.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 6.20 மி.மீ ,

பவானிசாகர் - 16.00 மி.மீ ,

கொடிவேரி அணை - 6.20 மி.மீ

வரட்டுப்பள்ளம் அணை - 8.80 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 227.80 மி.மீ ஆகவும், சராசரியாக 13.40 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.

Updated On: 10 Oct 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...